எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சிக்கான முழுச்செலவையும் மத்திய அரசே இனி ஏற்கும்

போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிபெறும் பிற்படுத்தப்பட்ட (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மாணவர்களுக்கு பயிற்சிக்காலத்தில் ஆகும் முழுச்செலவையும் மத்திய அரசே இனி ஏற்க முடிவுசெய்துள்ளது.

முன்பு, எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்த மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் பங்கேற்பதற்காக பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வதற்கு ரூ.20,000 உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வந்தது.

இந்நிலையில், இந்தப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சிக்காலத்தில் ஆகும் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கும்வகையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம், அண்மையில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் உயரதிகாரி, தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை கூறியதாவது:

எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்த மாணவர்கள் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. இதற்கு பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து மாணவர்கள் பயிற்சிபெறுகின்றனர். இனி, பயிற்சிக் காலத்தில் ஆகும் மொத்தசெலவையும் மத்திய அரசே ஏற்கும். மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்க புகழ் பெற்ற பயிற்சி நிறுவனங்கள் அட்டவணைப் படுத்தப்பட்டு வருகின்றன.

மாநில அரசுகளும், யூனியன்பிரதேச அரசுகளும் மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி அளிக்க சிறந்தபயிற்சி நிறுவனங்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். குடும்பத்தினரின் ஒட்டுமொத்த ஆண்டுவருவாய் ரூ.6 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், இந்தத் திட்டத்தின் கீழ் எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பலன்பெற முடியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...