சிறிய வார்த்தை யையும் பெரிதுபடுத்துவதால், பொதுவாழ்க்கையில் நகைச் சுவைக்கு இடமில்லாமல் போய்விட்டது என பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் கூறி இருந்தார். இந்நிலையில், ராணுவமந்திரி மனோகர் பாரிக்கரும் அதேகருத்தை தெரிவித்துள்ளார்.
அவரது சொந்தமாநிலமான கோவாவின் தலைநகர் பனாஜியில் கோவா என்ஜினீயரிங் கல்லூரியின் பொன் விழா நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற போது, அவர் இதை குறிப்பிட்டார். அவர்பேசியதாவது:–
நான் கோவாவில் இருக்கும் போது, ‘ஜோக்’ அடித்து நகைச் சுவையாக பேசும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், டெல்லியில் இருக்கும் போது அப்படி நகைச்சுவையாக பேசபயமாக இருக்கிறது. ஏனென்றால், ‘ஜோக்’ அடித்து பேசினால், அதை திரித்துக் கூறி குழப்பத்தை உருவாக்கி விடுகிறார்கள். அந்தளவுக்கு சர்ச்சையை உருவாக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கோவாவில் சர்வ சாதாரணமாக ‘ஜோக்’ அடிக்க முடிகிறது இவ்வாறு அவர் பேசினார்.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.