குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவத்தை காங்கிரஸ் அரசியலாக்குகிறது குஜராத்தில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்துவிசாரிக்க தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்டகட்சிகள் இதை அரசியலாக்குகின்றன.
நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும்போது தூங்கிவிட்டு, குஜராத்துக்குச்சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஆறுதல் கூறுகிறார். கேரளத்தில் தலித் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டபோது, அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்தது. அப்போது, ராகுல் அங்கு செல்லவில்லை.
இதுபோன்ற சம்பவம் பாஜக ஆட்சியில்மட்டும் நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிராக ஆயிரம் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது போன்ற சம்பவங்களை அரசியலாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த எம்.பி.க்கள்தான் அதிகமாக உள்ளனர். கடந்த 50 ஆண்டுகள் ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசு மக்களை ஒருங்கிணைப்பதைவிட வாக்கு வங்கியை வைத்துதான் செயல்பட்டது.
காஷ்மீருக்கு கொடுத்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது அர்த்த மற்றது. காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீருக்காக என்னசெய்தார்கள்? காஷ்மீருக்கு தேவையான அனைத்தையும் பாஜக அரசு செய்துவருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக உள்ளன
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சரக்கு- சேவைவரி மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். இந்தமசோதா நிறைவேறினால் நாடு வளர்ச்சிபெறும் என்பதால், யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
வெங்கய்ய நாயுடு
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.