சாதாரண மனிதனும் கல்வியால் மிகஉயர்ந்த இடத்துக்கு முன்னேற முடியும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு அப்துல் கலாம்

ராமேசுவரம் ஒரு புனிதநகரம். கலாமின் நினைவு நாளில் நடைபெறும் இந்தநிகழ்ச்சியும் ஒரு புனிதமான நிகழ்ச்சி. கலாம் நம்மிடம் விட்டுச்சென்ற எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் சாதனைகள் மூலம் நம்முடைய இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இதயத்தில் வாழும் கலாமுக்கு எதற்கு தேசியநினைவகம் என்று கேட்கலாம். இந்த நினைவகம், கோவில், மசூதி, தேவாலயம்போல வருங்கால சந்ததியினருக்கு இப்படி ஒருமனிதர் வாழ்ந்தார் என்று சொல்வதற்காக எழுப்ப வேண்டியுள்ளது.

சாதாரண மனிதனும் கல்வியால் மிகஉயர்ந்த இடத்துக்கு முன்னேற முடியும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம்.சாதாரண மீனவகுடும்பத்தில் பிறந்து, பல சவாலான பணிகளை செய்து, குடியரசுத்தலைவர் பதவி வரை ஒருசாதாரண மனிதரால் கல்வியால் உயரமுடியும் என்பதற்கு கலாம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. அணுசக்தி விஞ்ஞானத்தை உலகம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். கலாமோடு ராமேசுவரம் ஒன்றியுள்ள ஊர் என்பதால் "அம்ருத்' திட்டத்திலும் இணைக்கப் பட்டுள்ளது. ராமேசுவரத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ. 48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலாம் நினைவிடத்துக்காக கூடுதலாக இடத்தை ஒதுக்கிதந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடற்படையின் தயார்நிலை குறித்த ...

கடற்படையின் தயார்நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆய்வு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (ஜூன் 14, ...

குவைத் தீ விபத்து இந்தியர் உடல ...

குவைத்  தீ விபத்து இந்தியர் உடல்களுடன் சிறப்பு விமானம் கொச்சி வந்தடைந்தது சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர ப ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர பிரதானின் கருத்து மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக ...

குவைத் தீ விபத்து-மோடி ஆலோசனை

குவைத்  தீ விபத்து-மோடி ஆலோசனை குவைத் தீ விபத்து தொடர்பாக வெளியுறவுத் துறை இணை ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி அமைக்கும் பாஜக ஒடிஸா முதல்வராக பழங்குடியினத் தலைவா் மோகன்சரண் மாஜீ புதன்கிழமை ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்ட ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தின் முதல்வராக பெமாகாண்டு தொடா்ந்து 3-வது ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...