பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பெரம்பலூரில் நேற்று அளித்த பேட்டியில்:தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரோக்கியமான கூட்டத்தொடர்போல் தெரியவில்லை. மக்கள் பிரச்னைகள் எவ்வளவோ உள்ளது. ஆனால் சட்டசபையில் அதிமுகவும், திமுகவும் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக தமிழகஅரசின் நிதியமைச்சரே கூறிக்கொள்கிறார். ஆனால் கொலை, தற்கொலை, வழிப்பறி அதிகளவில் நடந்துவருகிறது. காவல்துறைக்கே பாதுகாப்பாற்ற சூழ்நிலை தான் நிலவிக் கொண்டிருக்கிறது.
காவல் துறையில் 20 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு தமிழிசை கூறினார்.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.