ஜிஎஸ்டி மசோதா : மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு: குளோபல் டைம்ஸ்

சரக்குசேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்றியதால், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி யுள்ளன என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகள் இந்திய அரசை பாராட்டி வருகின்றன. இந்நிலையில், சீன அரசுப்பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' நாளிதழில், இதுதொடர்பான கட்டுரை வெள்ளிக்கிழமை (ஆக.5) பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப் பட்டதால், இந்தியப்பொருளாதாரம் மேம்பட வாய்ப்பிருப்பதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

இந்தியாவில் முதலீடுசெய்ய உலகநாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், தடைகளும் நீடித்து வந்தன. அவற்றில் முக்கியமானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் வெவ்வேறு வரிவிதிப்பு முறைகள்தான்.

இப்போது, அதற்குத் தீர்வுகாணும் விதமாக ஒரேசீரான வரி விதிப்புக்கு வித்திடும் ஜிஎஸ்டி மசோதாவை இந்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இத்தைகைய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டின் தொழில்முதலீடு அதிகரிக்கும்.

உலக நாடுகளை சேர்ந்த பலநிறுவனங்கள் இந்தியாவில் தொழில்தொடங்க இது வழிவகுக்கும். இந்தியஅரசின் இந்த நடவடிக்கையை சீனா மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. தொழில் – வர்ததகத்தில் மேலும் அதிகளவில் அந்நாட்டுடன் ஒருங்கிணைந்து செயல்பட சீனா விரும்புகிறது.

ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது அரசியல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு மோடி தலைமையிலான அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்விளைவாக இரண்டாவது முறையும் பிரதமர் பதவியை கைப்பற்ற மோடிக்கு வாய்ப்புள்ளது என்று அந்தக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...