32 தமிழர்கள் மீது ஆந்திர அரசு பொய்வழக்கு

செம்மரம் கடத்தியதாக கூறி 32 தமிழர்கள் மீது ஆந்திர அரசு பொய்வழக்கு போட்டிருப்பதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். 70-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் சங்கரலிங்கனார், செண்பகராமர் உள்ளிட்டோரின் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர் ஆந்திர எல்லையோர கிராம மக்களின் வறுமையை பயன்படுத்திக்கொள்ளும் இடைத்தரகர்கள், அம்மக்களை தவறான செயல்களுக்கு பயன்படுத்தி கொள்வதாக குறிப்பிட்டார்.

இது தடுக்கப்பட தமிழகஅரசு இவ்விகாரத்தில் தனிகவனம் செலுத்தவேண்டும் என கோரியவர், ஆந்திர எல்லையோர கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடுகளை செய்யவும் கேட்டுக்கொண்டார். சுதந்திர தினத்தை 15 நாட்கள் கொண்டாட பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் உள்ள தியாகிசிலைகள் மற்றும் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் விரைவில் தமிழகம் வர உள்ளதாக கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...