காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டுவிவகாரம் என்றும் அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தலையிடுவதை ஏற்கமுடியாது என்றும் பாஜக செய்தித்தொடர்பாளர் ஷைனா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் மனித உரிமைமீறல்கள் நடைபெற்று வருவதாக கடிதம் ஒன்றை பாகிஸ்தான் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பியிருந்தது. இதனையடுத்து, ஆய்வுசெய்ய காஷ்மீருக்கு வர விருப்பம் தெரிவித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடிதம் ஒன்றை இந்தியாவிற்கு அனுப்பிஇருந்தது.
இதனைதொடர்ந்து, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விருப்பத்திற்கு பாஜக செய்தித்தொடர்பாளர் ஷைனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறதா என்பதை ஆய்வுசெய்ய விரும்பும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் நல்லெண்ணம் பாராட்டுக் குரியது என்று கூறிய ஷைனா, அதேநேரத்தில் காஷ்மீர் அவர்கள் தலையிடும் பகுதியல்ல என்றும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.