வெங்காயம் ஏற்றுமதி யாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை

உள்நாட்டில் விலைவீழ்ச்சியால் வெங்காயம் ஏற்றுமதி யாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரமாக வெங்காயம் விலை கடும்வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்ற பெரியவெங்காயம் வீழ்ச்சி அடைந்து ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் சாம்பார் வெங்காயமும் ரூ.60-ல் இருந்து ரூ.20 ஆக குறைந்துள்ளது.

இதனால் நுகர்வோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் வெங்காய விவசாயிகளும், வியாபாரிகளும் பெருத்தநஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.5-க்குதான் வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பயிர்செலவு கூட எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில்தான் வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதையடுத்து மத்திய மந்திரி நிதின்கட்காரி வர்த்தகத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து உள்நாட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதை எடுத்துக்கூறி ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி, வர்த்தகத் துறை மற்றும் வேளாண்மைத் துறை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து வெங்காயம் ஏற்று மதியை ஊக்கப் படுத்தும் வகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வர்த்தகத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். இந்தசலுகை வருகிற 31-ந்தேதி வரை நீடிக்கும் என்றும் தேவைப்பட்டால் நீடிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...