காங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியில் ஒதுக்கிய நிதியை 2 ஆண்டுகளில் ஒதுக்கியுள்ளோம்

சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.,) மற்றும் இந்தியதேசிய பொறியியல் அகாடமி சார்பில் 3 நாட்கள் ‘பொறியியல் கல்வி 2020 மற்றும் பொலிவுறு நகரம்’ (ஸ்மார்ட் சிட்டி) என்ற தலைப்பில் பொறியாளர்கள் மாநாடு சென்னை அடையாறில் உள்ள இந்தியதொழில் நுட்பக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.

 

பொலிவுறு நகரம் திட்டத்துக்காக மத்தியஅரசு ரூ.48 ஆயிரம்கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 100 நகரங்கள் தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு நகரங்களுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி 20 பொலிவுறுநகரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன.

தற்போது மேலும் 40 பொலிவுறு நகரங்கள் அடங்கியபட்டியலை மத்திய அரசு இந்தமாத இறுதியில் அறிவிக்க உள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள நகரங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ்நாடு ஏற்கனவே சிறந்தமுறையில் செயல்பட்டு வருவதால் 2-வது பட்டியலில் தமிழக நகரங்களின் பெயர்கள் இருக்க வாய்ப்புள்ளது.

தேசிய பாரம்பரிய நகரங்கள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் வேளாங் கண்ணி, காஞ்சீபுரம் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் பாரம்பரிய நகரமான ஸ்ரீரங்கத்தையும் சேர்க்க முதல்அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நகர்புற மேம்பாட்டுக்காக 14-வது நிதிக் குழு ரூ.87 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. அதேபோல் 33 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக மாற்றுவதற்கு ரூ.78 ஆயிரத்து 200 கோடி அனுமதி தரப்பட்டுள்ளது. நாம் நாட்டின் இயற்கையை போற்றவும், கலாசாரத்தை மறக்காமல் இருப்பதற்காக பொலிவுறு நகரதிட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும். மத்திய அரசு நிதியில் இருந்து மாநில அரசுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. காங்கிரஸ்கட்சியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒதுக்கிய நிதி, மோடி அரசில் கடந்த 2 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...