விவசாயிகளிடம் இருந்து பருப்புவகைகளை மத்திய அரசு நேரடியாகவே கொள்முதல்செய்யும்

விவசாயிகளிடம் இருந்து பருப்புவகைகளை மத்திய அரசு நேரடியாகவே கொள்முதல்செய்யும் என்று மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா கூறியுள்ளார்.


கடந்த சிலமாதங்களுக்கு முன்பு பருப்பு வகைகளின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.200-க்கு மேல் அதிகரித்தது. இந்நிலையில் பண்டிகைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பருப்பு விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சரவைச்செயலர் பி.கே.சின்ஹா தலைமையில் அத்தியாவசியப் பொருள்களின் விலையை முக்கியமாக பருப்புவகைகளின் விலையை கட்டுப்பாட்டில் வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இதில், நுகர்வோர் விவகாரம், உணவு, வருவாய், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பி.கே. சின்ஹா கூறியதாவது:


மத்திய அரசு நிறுவனங்களான தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக்கூட்டமைப்பு, இந்திய உணவுக்கழகம், சிறு விவசாயிகள் வேளாண் தொழில் அமைப்பு உள்ளிட்டவற்றின் மூலம் விவசாயிகளிடம் இருந்து பருப்புவகைகளை நேரடியாகக் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே இந்த நேரடிக்கொள்முதல் தொடங்கிவிட்டது. இனி தொடர்ந்து பிற மாநிலங்களிலும் கொள்முதல் நடைபெறும்.பண்டிகைக் காலத்தில் நியாயமான விலையில் மக்களுக்கு பருப்பு உள்ளிட்ட பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அனைத்து அரசுத் துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...