நாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட உணவுபூங்கா

நாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட உணவுபூங்கா அமைய முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின்கட்காரி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

யோகா குரு பாபா ராம் தேவ் தன்னுடைய ‘பதாஞ்சலி’ குழுமம் மூலம் மூலிகைபொருட்களை நாடு முழுவதும் விற்பனைசெய்து வருகிறார். இதையொட்டி, நாக்பூர் மிகான் பகுதியில் பிரமாண்ட உணவு மற்றும் மூலிகைபூங்கா அமைக்க மாநில அரசிடம் அனுமதி கோரினார்.

இதற்காக அவருக்கு நாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்த உணவு பூங்காவுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், ‘‘பதாஞ்சலி குழுமத்துக்கு நிலம் ஒதுக்கீடுசெய்தது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றது. ஏக்கர் தலா ரூ.25 கோடி வீதம் பதாஞ்சலி குழுமத்துக்கு நிலம் ஒதுக்கப் பட்டது’’ என்றார்.

இந்த மாபெரும் உணவுபூங்கா மூலம் சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறிய பாபாராம்தேவ், பதாஞ்சலி குழுமம் விவசாயிகளுக்கு வேளாண்பொருள் உற்பத்திசெய்ய கடன் உதவி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...