தேவபாஷையில் ஐநாவின் சாசனம்-

ஒரு நாட்டின் தொன்மையான மொழியை அந்த நாட்டு மக்களே கற்கக்கூடாது என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு
இருக்கும் கூட்டங்கள் இருக்கும் இந்தியாவில் வேண்டுமா னால் சமஸ்கிரதத்தின் மேன்மை அறியப்படாமல் இருக்கலாம்.ஆனால் உலக நாடுகளை வழி நடத்தும் ஐநா சபையில் சமஸ்கிரதத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் விளைவினால் உண்டான ஞானத்தினால் 1945ம் ஆண்டில் அக்டோபர் மாதம் 24ம் தேதியில் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் , உலக நாடுகளின் மாநாடு'நடைபெற்றது. அதில், ஐ.நா., அமைப்பை உருவாக்குவதற்காக சர்வதேச நாடுகளிடை யே ஏற்பட்ட ஒப்பந்தம், சாசனமாக இயற்றப்பட்டது. இந்த சாசனம் இதுவரை ஐ.நா.,வின் 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சம்ஸ்கிருதத்திலும் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது அரபி,சைனீஸ்,ஆங்கிலம் ,பிரெஞ்சு,ஸ்பானிஸ், ரஷ்யன். என்று ஆறு உலக மொழிகளில் உள்ள ஐநா
சபையின் அரசியல் சாசனம் தற்பொழுது ஏழாவதாக சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்க்கபட்டு உலகளவில்
இந்தியாவின் தெவபாஷைக்கு அங்கீகாரம் கிடைத்து ள்ள து.சம்யக் + க்ருதம் = சம்ஸ்க்ருதம், நன்கு செய்யப் பட்டது, Perfected என்று பொருள்.ஆகவே இனிதான் ஐநாவின் சாசனம் Perfect ட்டாக செயல்பட துவங்கும்.

இந்தியாவில் இன்றும் சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்றே உணர்த்தப்பட்டு வருகிறது.சமஸ்கிருத
த்தில் புலமைபெற்ற கவி காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ பிராமணர்கள் அல்ல காளிதாசன் இடைக்குல த்தைச் சேர்ந்தவர். வால்மீகி ஒரு திருடராக இருந்தவர். வேதங்களை அருளிய வியாசர் பரத குலத்தில் பிறந்தவர் அதனால் சமஸ்க்ருதம் ஒரு சாராருக்கு மட்டும் சொந்த மானது என்ற கூற்று தவறு. பழைய காலத்தில் அப்படி இருந்ததும் இல்லை.

ஆங்கில முறைக் கல்வி வருவதற்கு முன் ஒவ்வொரு கிராமத்திலும், சிற்றூரிலும் குருகுலக் பள்ளிக் கூடங்கள் இருந்தன. சமஸ்கிருதம் அனைத்து மக்க்களிடமும் கொண்டு செல்லப்பட்டது.இந்தியாவின் பாரம்பரியத்தை ஒழிக்க திட்டம்போட்ட ஆங்கிலேயர் திராவிட ஆரிய கதைகளை புகுத்தி இந்தியாவில் இனப்பிரிவினையை உருவாக்கி விட்டார்கள்

மெக்காலே புகுத்திய இந்திய கல்விமுறையினால் நாம் நம்முடைய மொழிகளை இழந்துவிட்டோம்.அதாவது.
கண்ணிருந்தும் குருடர்கள்போல இருக்கிறோம்.ஆனால் மத்தியில் பிஜேபி ஆட்சி இருக்கும்வரை நம்முடைய பார்வை கோளாறை சர் செய்யும் நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கும்.அதன் ஒரு நிகழ்வுதான் ஐநா சபையில் சமஸ்கிருதத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம். அடுத்து நம்முடைய புதியகல்விக்கொள்கையிலும் இது
எதிரோளிக்கும்

இந்தி, வங்காளி, குஜராத்தி, மராட்டி, காஸ்மீரி, அரியான் வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சா பி, உருது போன்ற மொழிகளின் மூலமான சமஸ் கிருதத் தி ன் வழியாக ஐநா சபையின் சாசனத்தைவெளியிட செய்தலக்னோவில் உள்ள அகில பாரதிய சமஸ்கிருத பரிஷித் செயலாளரான ஜிதேந்திர குமார் திரிபாதிக்கும்
ஐநா சபையினில் உள்ள இந்திய தூதர் செய்யது அக்பரு தின் அவர்களுக்கும் தலைவணங்கி பாராட்டுக்கள்….

நன்றி விஜயகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...