இந்துஇயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல் நீண்டு கொண்டே செல்கிறது

இந்து இயக்க நிர்வாகிகள் கொலையில் குற்றவா ளிகளைக் கண்டறிய மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வேலூரில் தொடங்கி திண்டுக்கல், கோவை, திருப்பூர், சென்னை என இந்துஇயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல் நீண்டு கொண்டே செல்கிறது. நேற்று (அக். 4) சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் நரஹரி தாக்கப்பட்டுள்ளார். இந்ததாக்குதகள் நடத்தப்பட்ட விதத்திலிருந்து அவை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது.

மதவாத அரசியல் பேசுபவர்கள் வாக்குவங்கி அரசியலுக்காக இந்து இயக்க நிர்வாகிகள் கொல்லப்படுவதை கண்டிப் பதில்லை. வேலூரில் டாக்டர் அரவிந்த்ரெட்டி கொல்லப்பட்டபோது போலி குற்றவாளிகளை கொண்டுவராமல், உண்மையான குற்றவாளிகளை பிடித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல் துறையினர் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும். ஆனால், முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையல் காவல் துறை செயல்படுவது துரதிருஷ்டவசமானது.

 

தற்போது நடக்கும் நிகழ்வுகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்வது சாத்தியமல்ல. எனவே, அமைச் சர்கள் இதனை காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில், இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மக்கள் பொறுமை இழந்தால் சட்டம் – ஒழுங்குகெடும் என்பதை அரசு உணரவேண்டும் இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...