வதோதராவில், நாட்டின் முதல் ரயில்வேபல்கலை

குஜராத் மாநிலம் வதோதராவில், நாட்டின் முதல் ரயில்வேபல்கலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

குஜராத்தில், முதல்வர் விஜய்ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வதோதரா விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த முனையகட்டடத்தை, பிரதமர் நரேந்திரமோடி, துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு, விமானபோக்குவரத்தை அதிகரிப்பது மிகவும் அவசியம். தற்போது, நம் நாட்டில் உள்ள விமான நிலையங்களின் மூலம் வேகமான வளர்ச்சியை அடைய முடியாது.

இதற்குமுன், மத்தியில் ஆட்சிசெய்த காங்., தலைமையிலான அரசு, நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை. இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில், விமானசேவையை துவக்குவதன் மூலம், நாட்டின் சுற்றுலாதுறை மேம்படும்; தொழில்வளர்ச்சியும் அதிகரிக்கும்.

எனவே, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், விமானசேவையை பரவலாக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன் மூலம், இந்ததுறையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

கேரள மாநிலம் கொச்சிக்கு அடுத்தபடியாக, வதோதரா விமானநிலையம் நாட்டின் இரண்டாவது பசுமை விமான நிலையமாக அமைந்துள்ளது; இது, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.நாட்டின் வளர்ச்சிக்கு, ரயில்வே துறையையும் மேம்படுத்தவேண்டியது அவசியம். அதன் ஒருபகுதியாக, நாட்டின் முதல் ரயில்வே பல்கலை கழகத்தை, வதோதராவில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; விரைவில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...