வீணாக குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார்

பா.ஜனதா சார்பில் மத்தியபிரதேசத்தில் இருந்து டெல்லி மேல் சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள இல.கணேசன் சென்னையில் காஞ்சி சங்கராச் சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை கடற்படையால் தாக்குதலுக் குள்ளாகும் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக டெல்லியில் நடக்கும் பேச்சு வார்த்தையில் சுமூகதீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.

ஏற்கனவே இதுதொடர்பாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜிடம் விரிவாக பேசி இருக்கிறோம்.ராணுவத்தினருக்கு ஒரேபதவி ஒரே ஓய்வூதியம் தொடர்பாக ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யதவறிய, தாமதப்படுத்திய காங்கிரசுக்கு அதைப்பற்றி பேச தகுதிஇல்லை.

வீணாக குழப்பத்தை ஏற்படுத்தவும், குழம்பியகுட்டையில் மீன் பிடிக்கவும் ராகுல் காந்தி முயற்சிக்கிறார். ராணுவத்துக் குள்ளேயே பதட்டம், பீதி, கலவரத்தை உருவாக்க முயற்சிக்கும் எவர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தற்கொலை விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவு வருவதற்குள் அப்படி என்ன அவசரம்?

ராகுல்காந்தி ஒருநாள் மட்டுமே கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளார். இது அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. அரசியல் வேறு நாட்டு நலன் வேறு. நாட்டு பாதுகாப்பு விசயங்களில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை. நாட்டைபாதுகாக்க எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...