பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப் படுவது வேதனை தருகிறது

பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டுவருவதால் மிகுந்த வேதனை அடைந்துள்ள பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என எண்ணுவதாக கூறியுள்ளார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்தமாதம் 16-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே ரூபாய் நோட்டு பிரச்சினையை எழுப்பி, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை முடிவடையும் நிலையில், சொல்லிக்கொள்ளும்படியான எந்த அலுவலும் இதுவரை நடைபெறவில்லை.

பாராளுமன்றம் தினந்தோறும் ஒத்திவைக்கப் படுவது பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.பி.யுமான எல்.கே.அத்வானிக்கு மிகுந் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றத்தை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்றும்அறிவித்தார். இதனால் மிகுந்த வேதனை அடைந்த அத்வானி, சபையில் இருந்து எழுந்து செல்லாமல் தனது இருக்கையிலேயே அமர்ந்துஇருந்தார்.

அப்போது அங்கு வந்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தனது வேதனையை பகிர்ந்தார். உடனே இரானி அருகில் நின்றுகொண்டிருந்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் இதைதெரிவித்தார். உடனே அவர் சில எம்.பி.க்களுடன் அத்வானிக்கு அருகில்வந்து அவரது மனக்குறையை அமைதியாக கேட்டுக் கொண்டார்.

அவரிடம் பேசிய அத்வானி, ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து நாளைக்காவது (இன்று) விவாதம் நடத்துவதை உறுதிசெய்யுமாறு சபாநாயகரிடம் எடுத்துரைக்க கூறினார்.

அவ்வாறு நடக்கவில்லை என்றால், கூட்டத்தொடர் முற்றிலும் பயனற்று (வாஷ்அவுட்) போனதாக கருதப்படும் என்றும் தனது மனக் குறையை தெரிவித்தார்.

எந்த விதியின் கீழாவது ரூபாய் நோட்டு பிரச்சினையை விவாதிக்கவேண்டும் என்று வலியுறுத்திய அத்வானி, இதில் யாரும் தங்கள்தரப்பு வெற்றி பெற்றதாகவோ அல்லது தோல்வியடைந்ததாகவோ கருதவேண்டாம் என்றும் கூறினார். கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்படுவது பாராளுமன்றத்தின் தோல்வியாகவே கருதப்படும் எனவும் அத்வானி வேதனைதெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...