ரூ.5 ஆயிரம் உச்ச வரம்பு நிபந்தனையை ரிசர்வ் வங்கி ரத்துசெய்தது

ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட்செய்வதற்கு விதித்த நிபந்தனையை ரிசர்வ் வங்கி ரத்துசெய்தது.

கருப்புபணத்துக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக கடந்த 19-ந் தேதி ரிசர்வ் வங்கி பல புதிய நிபந்தனைகளை விதித்தது.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதிக்குள் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் ஒருமுறை மட்டுமே வாடிக்கையாளர் டெபாசிட் செய்ய முடியும். அப்போது வங்கி அதிகாரிகள் இருவர் ஏன் இதுவரை பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட்செய்யவில்லை என்று கேள்வி எழுப்புவார்கள். அதற்கு பதில் அளிக்க வேண்டும்.

அதேபோல் ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை அடுத்தடுத்த நாட்களில் செலுத்தினால் அந்ததொகை ஒட்டு மொத்தமாக ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும் அதுபற்றி வங்கி அதிகாரிகள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் ரிசர்வ் வங்கி நிபந்தனைவிதித்தது.

வங்கியில் தங்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் விண்ணப்ப படிவத்தை நிரப்பிய வாடிக்கையாளர்களுக்கும்(கே.ஒய்.சி.) இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நிபந்தனைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 30-ந்தேதிவரை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் மோடி, நிதிமந்திரி அருண்ஜெட்லி ஆகியோரின் உறுதிமொழியை ரிசர்வ் வங்கி மீறலாமா? என்ற கேள்வியும் எழுந்தது.

பல முக்கிய நகரங்களில் கடந்த 2 நாட்களாக வங்கிகளில் பழையரூபாய் நோட்டுகளை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக செலுத்தியவர்கள்  தங்களுடைய அதிருப்தியை வங்கி அதிகாரிகளிடம் பதிவுசெய்தனர்.

குறிப்பாக வங்கியின் கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் ரிசர்வ்வங்கியின் நிபந்தனைக்கு கடும் எதிர்ப்புதெவித்தனர். இதை உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு வங்கி அதிகாரிகள் கொண்டுசென்றனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு நிதி மந்திரி அருண் ஜெட்லி “ஒரு முறை டெபாசிட் ஆக ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக பழைய ரூபாய்நோட்டுகளை வங்கியில் செலுத்தினால் அதுபற்றி வங்கிஅதிகாரிகள் கேள்வி எதுவும் எழுப்பி தொந்தரவுதரமாட்டார்கள். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதியசுற்றறிக்கையை வெளியிடும்” என்று உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் தொடர்பான முந்தைய நிபந்தனையை ரத்துசெய்து புதிய அறிவிக்கை ஒன்றை நேற்றுவெளியிட்டது.

அதில், “ரிசர்வ் வங்கியின் மறு ஆய்வு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி வங்கியின் முழுமையான கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் ஒரேதடவையில் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். அல்லது பல முறை இந்த தொகைக்கு அதிகமாகவும் செல்லாத என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை செலுத்தலாம். இப்படி பணம்செலுத்தும்போது வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் எந்த கேள்வியும் எழுப்பமாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...