நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு

பீஹாரில் மதுவிலக்கு கொண்டுவந்ததற்காக முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் மோடி பாராட்டினார். பாட்னாவில் சீக்கிய மதகுரு கோவிந்த்சிங் பிறந்த நாளை கொண்டாட்டத்தை முன்னிட்டு விழாநடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசுகையில், மதுவிலிருந்து எதிர் கால சமுதாயத்தை பாதுகாக்க நிதிஷ் குமார் எடுத்த நடவடிக்கைக்காக அவரை நான்பாராட்டுகிறேன். சமூகமாற்றத்திற்கு மது விலக்கு மிகப்பெரிய முடிவாகும்.

சமூக முடிவிற்கு ஒருதிட்டத்தை முன்னெடுத்து செல்வது என்பது கடினமான முடிவாகும். ஆனால், இதனை நிதிஷ் செய்துள்ளார். இது நிதிஷ் குமார் அல்லது அரசியல் கட்சியினரின் பணியாக மட்டும் இருக்கக்கூடாது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக இதனை அனைவரும் வெற்றிபெற செய்ய வேண்டும். அரசியல்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் வெற்றிபெற செய்ய வேண்டும். இந்த திட்டம் இங்கு வெற்றிபெற்றால், நாடு முழுவதிற்கும் முன்மாதிரியாக இருக்கும். இந்தவிழாவை நிதிஷ் முன்னின்று ஏற்பாடு செய்ததாக எனக்கு தெரிவித்தனர். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

பின்னர் பேசிய பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், நரேந்திர மோடி குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள் இருந்தபோது, மதுவிலக்கை வெற்றிகரமாக செயல் படுத்தி வந்தார் எனக்கூறினார். ரூபாய் நோட்டு வாபஸ்திட்டத்தை வரவேற்ற பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் மோடியை பாராட்டியிருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முட ...

2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் அமித் ஷா உறுதி வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் முடிவுக்கு ...

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் க ...

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்கு பதிலாக பேனாவும் புத்தகமும்  இருப்பதாக மோடி நெகிழ்ச்சி ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் தற்போது கற்களுக்குப் பதிலாக பேனாவும், ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...