ராஜபாளையத்தில் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்புக்கு காத்திருக் கிறோம். தீர்ப்பு எதிராகவந்தால் அடுத்தகட்ட நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கும். தமிழக அரசு ஜல்லிக் கட்டுக்கு பதிலாக ஏறு தழுவுதல் என்ற புதியவிழாவை அறிவித்து நடத்த வேண்டும். ஜல்லிக் கட்டுக்கு தான் தடை உள்ளது. ஏறுதழுவுதலுக்கு இல்லை.
எனவே தமிழக அரசு சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி ஏறுதழுவுதலை நடத்தலாம். விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்துகொள்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் தைரியமாக இருக்கவேண்டும். விவசாயிகளின் நலன் நிச்சயம் பாதுகாக்கப்படும். மத்திய அரசின் உதய்திட்டத்தில் தமிழகம் சேர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.