கதர் வாரியம்- காந்திஜி- மோடி

கதர் வாரியம் காலண்டரில் இது வரை காந்திஜி படம் மட்டுமே இருந்து வந்தது. இப்போது மோடியின் படம் வந்திருக்கிறது. மோடியை விளம்பரப்படுத்த இந்த சந்தர்ப்பம் தானா கிடைத்தது? குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது மோடி ஆட்சியில் தானே? மோடிக்கு என்ன தகுதி உள்ளது? இன்றைக்கும் அவர் ஆட்சியில் சிறுபான்மையினர் பயந்து கொண்டிருக்கிறார்களே?

 

விதி என்ற பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் ஒரு படம் தயாரித்தது. அதில் பாக்கியராஜ் ஒரு இடத்தில் 'உங்களுக்குத் தெரிந்த கற்புக்கரசிகளைச் சொல்லுங்கள்" என்று துணை நடிகர்களை ஒரு காட்சியில் கேட்பார். அதற்கு அவர்கள்- வள்ளுவனின் வாசுகி, கண்ணகி என பட்டியலிடுவார்கள். அதற்கு பாக்கியராஜ் 'அப்படியானால் உங்கள் பக்கத்தில் இருக்கும் உங்கள் மனைவி கற்புக்கரசி இல்லையா?" என்று கேட்டு வைப்பார். தியேட்டரில் ஒரே கிளாப்ஸ். அலங்காரில் பார்த்தேன் .

அது போல் , கதர் என்றால் காந்திஜி. இந்தியா என்றால் நேருஜி என்று இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டிருப்பது? ஹரியானாவின் பா.ஜ. க அமைச்சர் , மோடியின் ஆட்சி காலத்தில் கதர் வாரியத்தின் வளர்ச்சி அதிகரித்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

இருந்தால் என்ன? என்றைக்கு நாம் அவுட் ஆஃப் பாக்ஸ் சிந்திக்கப் போகிறோம்?

அடுத்து நேரு குடும்பத்துக்கு வருவோம். அது என்ன இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி. இப்போது சோனியா மற்றும் ராகுல் காந்தி? இவர்கள் என்ன காந்தி பரம்பரையா? எதனால் எப்படி இந்தப் பெயர் வந்தது? காந்தே என்று தானே இருக்க வேண்டும்.

சரி.. குஜராத்துக்கு வருவோம். அதில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் இறக்கவில்லை. 750 பேர் கொல்லப்பட்டார்கள் .2000 பேர் என்று செம்மறியாடுகள் சொல்லிக் கொண்டிருந்தாலும்..கூடவே 250 ஹிந்துக்கள், குஜராத் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள்.

அது ஒரு விபத்து.

அப்படியானால் காந்திஜி காலத்தில் நவ்காளி நடந்ததே?அந்த கால கட்டத்தில் சுதந்திரம் வாங்குவதற்கு 1 வருடம் முன்னர் நடந்த போது காந்திஜி இருந்தாரே. அவருக்கும், நேருஜிக்கும் இதில் தார்மீகப் பொறுப்பு உண்டா இல்லையா?இது குஜராத் கலவரத்தை விட பயங்கரமானதாயிற்றே!

The massacre of the Hindu population started on 10 October, on the day of Kojagari Lakshmi Puja, and continued unabated for about a week. It is estimated that a minimum of more than 5,000 Hindus were killed,[1][2] hundreds of Hindu women were raped and thousands of Hindu men and women were forcibly converted to Islam.[3] Around 50,000 to 75,000 survivors were sheltered in temporary relief camps in Comilla, Chandpur, Agartala and other places.[4] Around 50,000 Hindus remained marooned in the affected areas under the strict surveillance of the Muslims, where the administration had no say

https://en.wikipedia.org/wiki/Noakhali_riots

ஆக, என்னைப் பொறுத்தவரை மோடியை கதர் வாரிய காலண்டரில் போட்டதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.. சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்தாலும்..

மோடி பிரதமர் பதவி ஏற்று 3 வருடங்கள் நிறைவடையப் போகிறது. இது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை..குஜராத் அளவுக்கு.

இதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

மோடியை விமர்சிக்கும் போது தாராளமாக விமர்சிக்கும் செம்மறியாடுகள் பாராட்டும் போது கஞ்சத்தனம் காட்டுகிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...