ஜல்லிக்கட்டு தமிழக அரசின் நடவடிக் கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக துணைநிற்கும்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக் கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக துணைநிற்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்.


முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்புக்குபிறகு பிரதமர் அலுவலகம் சுட்டுரை பக்கத்தில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது நடைபெற்ற ஆலோசனையின்போது, ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடைகுறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழக கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜல்லிக் கட்டு உள்ளதை வரவேற்ற பிரதமர், தற்போது அது தொடர்புடைய விவகாரத்தில் முடிவெடுப்பது நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாகஅமையும் என்று கருதினார். தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும். தமிழகத்தில் வறட்சியால் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்ய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். தமிழகத்துக்கு மத்தியகுழு விரைவில் அனுப்பிவைக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்' என்று சுட்டுரையில் குறிப்பிடப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...