முடிவுரா போராட்டம் எதையும் சாதிக்காது

எனக்கு சிலகேள்விகள். முதல் நாள் என்ன கோரிக்கை.அலங்கா நல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலைசெய் என்பது.மறுநாள் முதல்வர் வரணும் என்பது கோரிக்கை. 
 
மூன்றாவது நாள் ஓபிஎஸ் அறிக்கைவேண்டும். அதை பார்த்து விட்டுத்தான் கலைவோம். அறிக்கை வந்தது பாலகிருஷ்ணன் படித்தார். 
 
அதெல்லாம் முடியாது அவசர சட்டம் கொண்டு வரணும் என்ற கோஷம் எழுந்தது.ஓபிஎஸ் டெல்லி போனார். அவசர சட்டம் வருவது போன்ற சூழல்வந்தவுடன் அதெல்லாம் முடியாது நிரந்தர சட்டம் வேண்டும் என்று இப்போது கூறுகிறார்கள். 
 
ஒரு தமிழனாவது நான் ஏன் தினம் தினம் இப்படி கோரிக்கையை மாற்றுகிறேன் என்றுகேட்டார்களா? முதல் நாள் கோரிக்கைக்கும் கடைசி நாள்கோரிக்கைக்கும் எவ்வளவு வித்யாசம்.
 
முதலிரண்டு நாட்கள் கட்டுகோப்பாக இருந்த போராட்டம் அடுத்தடுத்த நாட்களில் கட்டுகோப்பாக இருந்ததா?
 
 மீடியா செய்தியாளர்களை திட்டுவதும் அடிப்பதும் கட்டுக்கோப்பான போராட்டமா? மீடியாக்கள் இன்று பொறுப்புடன் நடக்கிறதா? தனித்தனியாக உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் கூட்டத்திடம் தனி ஆட்களிடம் உங்கள் கருத்து என்ன என்று எதை பதிவு செய்கிறீர்கள். 
 
கடற்கரைக்குள்ளே நல்லா கான்கிரீட் போட்டு உட்கார்ந்து இருக்கும் மே17, மக இக , கூடங் குளம் டீம், எஸ்டிபிஐ , இன்னும் பிற அமைப்புகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் மேலும் மேலும் வளர்க்கிறார்களே அது பற்றி யாரும் மூச்டுக்கூட விடவில்லையே. 
 
வெளியே கோடிக்கணக்கில் இருக்கும் பொதுமக்கள் மவுனமாக இதை பார்க்கிறார்களே அவர்கள் கருத்து என்ன? . முடிவுரா போராட்டம் மூலம் நாளை பலப்பிரயோகம் நடந்தால் போலீஸ் கலைத்தால் வன்முறை தானே வெடிக்கும். இதுவும் தவறான வழிகாட்டுதல் தானே. 
 
நாளை இதேபோன்று பொது விஷயத்துக்கு கூடினால் மற்றவர்கள் எப்படி பார்ப்பார்கள். அரசாங்கத்துக்கு டைம் கொடுத்து குறித்த காலத்துக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் கூட தயங்க மாட்டோம் என்றால் அரசுக்கும் பயமிருக்கும்.
 
 முடிவுரா போராட்டம் எதையும் சாதிக்காது. அதுவும் ஒரு வகையில் வன்முறையில் தான் முடியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...