மத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1ம்தேதி முதல் தடைவிதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தலைநகர் போபாலில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: மத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த பாலித்தீன் பைகள் எளிதில் மக்குவதில்லை. இவை திறந்தவெளிகளில் வீசப்படுவதால், மழைநீர் பூமிக்குள் செல்வது தடுக்கப்பட்டு நிலத்தடி நீர் குறைந்துவருகிறது. மேலும், சுற்றுச் சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் மேய்ச்சலின் போது இந்த பாலித்தீன்பைகள் அவற்றின் வயிற்றுக்குள் சென்று விடுகின்றன. இதனால், அவை உயிரிழக்க நேரிடுகின்றன. எனவே, பாலித்தீன் பைகளுக்கு முழு தடைவிதிக்க முடிவு செய்துள்ளோம். மத்தியப் பிரதேசம் முழுவதும் வரும் மே 1ம் தேதி முதல் பாலித்தீன் பைகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பாலித்தீன் உற்பத்தியாளர்கள் மாற்று தொழிலுக்கு மாறுவதற்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு சவுகான் அறிவித்தார்.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.