ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆர்வத்தைதூண்டும் வகையில் அரசுவேலை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு மகிச்சியோடு கொண்டாடும்வேளையில் ஆங்காங்கே நடக்கும் சிலவிபத்துகளும், உயிரிழப்புகளும் கவலை அளிக்கிறது. எனவே ஜல்லிக்கட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கும், அவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் உடனே உயர்தர முதல்உதவியும், ஏன் ஆங்காங்கே சகலவசதிகளும், இரத்த வங்கியுடன் நடமாடும் மருத்துமனைகளும்,மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பணியில் இருப்பது உறுதிசெய்ய வேண்டும்.

அவர்களுக்கு ஏதோ பெயரளவில் சிகிச்சை அளிக்காமல் அவர்களுக்கு மிகச் சிறந்த தரமான உயர்தரமருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்க முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் அவர்களுக்கு இலவச சிகிச்சைகள், உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

ஏன் இந்தகவலை என்றல் சமீபத்தில் பாதுகாப்பில் இருந்த ஒரு காவலர் மாடுமுட்டி அளவுக்கு அதிகமான இரத்தபோக்கால் மருத்துவமனைக்கு செல்லும்வழியிலேயே இறந்து விட்டார் என்று செய்தி என்னை மிகவும் மனக்கவலை அடையச்செய்தது, எப்பாடு பட்டாகிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்படவேண்டும்.

காளைகள் இனம் அழியாமல் இருப்பதற்கு கால் நடை மருத்துவ பல்கலைக்கழகம் உரிய ஆராய்ச்சிகள்செய்து காளைகளின் இனிவிருத்திக்கு விஞ்ஞான பூர்வமாக காளைகளின் இனத்தைகாக்க முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை அளிக்கவேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும், ஜல்லிக்கட்டு விளையாட்டை மற்ற விளையாட்டுக்கள்போல ஊக்குவிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் இதன் மூலம் பல இளைஞர்கள் ஜல்லிக்கட்டு விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவர். இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...