காங்கிரஸ், சமாஜவாதி கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, லக்னௌவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: காங்கிரஸ், சமாஜவாதி இடையேயான கூட்டணி சந்தர்ப்பவாத, கொள்கையற்ற கூட்டணியாகும். மிதிவண்டியின் (சமாஜவாதி கட்சியின் சின்னம்) பின் இருக்கையில் அமர தனதுதந்தை முலாயம் சிங் யாதவுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இடம் தரவில்லை. எனினும், மிதிவண்டியின் கைப்பிடியை அவர் காங்கிரஸ்கட்சியிடம் அளித்துள்ளார்.
சமாஜவாதிக் கட்சியில் நடைபெற்று வரும் குடும்ப நாடகமானது நகைச்சுவை காட்சியிலிருந்து சோகத்துக்கு மாறிக்கொண்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்றகொள்கைக்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம்; உத்தரப் பிரதேசத்தை தலை நிமிரச்செய்வோம். மத்தியில் பாஜக ஆட்சி புரிந்துவரும் நிலையில், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடையும்.


கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது பாஜக அடைந்த மாபெரும் வெற்றியைப் போல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் கட்சியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு. 2014 மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 73 இடங்களில் பெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...