''எம்எல்ஏ.,க்களை ஓரிடத்தில் அடைத்துவைத்திருப்பது தமிழகத்திற்கு கேவலம்,'' என, மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.
இது குறித்து மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தற்போது எழுந்துள்ள பிரச்னையில், கவர்னர் வித்யாசாகர்ராவ் பொறுமையாக செயல்பட்டார்; இதைவிட வேறுயாரும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது. ஐம்பது ஆண்டுகளாக, திமுக.,வும், அதிமுக.,வும் தமிழகத்தை ஆட்சிசெய்து அழித்துவிட்டன. புதியதேடலில் மக்கள் உள்ளனர்.
அ.தி.மு.க.,வில், முதல்வராக யார்வருவார் என தெரியாது. யார் வந்தாலும் தமிழகத்தின் தலையெழுத்து அதுதான். எம்.எல்.ஏ.,க்களை ஓரிடத்தில் அடைத்துவைத்தது தமிழகத்திற்கு கேவலம். சட்டத்தை இயற்றக்கூடிய, எம்.எல்.ஏ.,க்களுக்கு சுதந்திரம் இல்லை என்றால் என்ன அர்த்தம்? தமிழகத்தில் மீதமுள்ள நான்கரை ஆண்டுகாலமும் ஆட்சி தொடரவேண்டும். அந்த கட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற போட்டி நடக்கிறது. மக்கள், அதிகாரத்தை இழந்து நிற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.