நான் உத்தரப் பிரதேசத்தின் தத்துப்பிள்ளை’ என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் ஹர்டோய், பாராபங்கி உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம்செய்தார். அவர் பேசியதாவது:
பகவான் கிருஷ்ணர் உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார். எனினும் குஜராத் அவரது கர்மபூமியானது. நான் குஜராத்தில் பிறந்தேன். என்னை உத்தரப் பிரதேசம் தத்தெடுத்துக்கொண்டது.
நீங்கள் என்னைத் தத்துப் பிள்ளையாக தேர்வு செய்திருப்பதால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட நான் கடமைப்பட்டிருக்கிறேன். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டுகிறேன்.
இது கங்கை, யமுனைபாயும் பூமி. வளமான மண், கோடிக் கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட மாநிலம். ஆனாலும் இன்னமும் வறுமை மறையவில்லை. இதற்கு யார்காரணம்? நிச்சயமாக மக்கள் இல்லை. மாநிலத்தை ஆட்சிசெய்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளே காரணம். இந்த 3 கட்சிகளிடம் இருந்தும் உத்தரப் பிரதேசம் விடுபட்டால் தான் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.
பாஜக ஆட்சி அமைத்தால் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணப்படும். உத்தரப் பிரதேசத்தில் இருந்து வறுமை ஒழிக்கப்பட்டால் தான் நாடு முழுவதும் வறுமை ஒழியும் இவ்வாறு அவர் பேசினார்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.