மாட்ட‌ரசிய‌லில் ம‌றைந்திருக்கும் உண்மை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின்படி யாரும் இனி மாடு, காளை, ஒட்ட‌க‌ம் போன்ற‌ கால்நடைகளை உண‌வுக்கு விற்பதற்காக சந்தைக்கு கொண்டு வரக்கூடாது.

அப்ப‌டி கொண்டுவ‌ருவ‌தானால்…கால்நடைகளை விவசாயிகள் விவசாய வேலைகளுக்கு விற்பவர் கால்நடை சம்பந்தமான ஆவணங்களில் 5 நகல்கள் வைத்திருக்க வேண்டும். முதல் நகல் வாங்குபவரிடமும், 2வது நகல் விற்பவரிடமும், 3வது நகல் வாங்குபவர் குடியிருக்கும் பகுதியின் தாசில்தாரிடமும், 4வது நகல் தலைமை கால்நடை அதிகாரியிடமும், 5வது நகல் கால்நடை விற்பனை கமிட்டியிடம் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிகளாக்கி மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இவ்வளவு ‌விதிகளும் எதற்காக?

📡 நம் நாட்டு மாடுகளைக் காப்பாற்று வதற்காகத்தான். இவ்வளவுக் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்ததே, இனி எல்லா நாட்டு மாடுகளும் விலை குறைந்தால் விவசாயியாவது மாடுகளைத் தங்கள் வீடுகளில் வளர்க்கப் முடியாது என்று சொல்வார்களா என்ன..?

அதுசரி, அப்ப‌டி இங்கு என்ன #ச‌ர்வ‌தேச‌பொருளாதார‌ அர‌சிய‌ல் விளையாடுகிற‌து…! விலை குறைந்த A1 பால் தரும் நம் நாட்டுப் பசுக்களை இனி எல்லோரும் வளர்க்க வேண்டும். அதே சமயம் நமது பாரம்பரிய இயற்கை விவசாயத்தை பெருக்க வேண்டும்.

அதற்காகத்தான் இவ்வளவு கட்டுப்பாடுகள்..! இல்லையெனில் நாளடைவில் நாட்டுப் பசுக்கள் எல்லாம் ஒழிந்து போய், பாலுக்காக 100% வெளிநாட்டுப் பசுக்களான ஜெர்சி இனப் பசுக்களையே நாம் சார்ந்திருக்க வேண்டிய இந்த நிலையினை மாற்றம் செய்ய

1.4 பில்லிய‌ன் ம‌க்க‌ள்தொகை கொண்ட‌ இந்த தேசத்தில் (உணவு, தேநீர், இனிப்பு வகைகள், வெண்ணெய், நெய், தயிர் போன்றவைகளுக்காக) 100 கோடி லிட்டர் பால் நாளொன்றுக்கு தேவை என்று குறைந்த‌ப‌ட்ச‌ம் கணக்கிடுங்கள்.

மாதத்திற்கு 3,000 கோடி லிட்டர் பால் தேவைப்ப‌டும். ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் என்றால்கூட‌, மாதத்திற்கு 1,20,000 கோடி ரூபாய் பால் வணிகம். அப்படியானால் "வருஷத்துக்கு 14,40,000 கோடி ரூபாய்" வணிகம்..! –

மாட்டுகறி தின்னும் நாடுகள் தங்கள் விலை குறைந்த இந்திய மாட்டுகறி இனி இந்தியாவில் இருந்து கிடைக்காது. இது பல நூறு கோடிகள் வியாபாரம். அதுமட்டுமல்ல தோல் தோல் தொழில்துறை மூலம் வணிகம் பல நூறு கோடிகள் வருமானம் இதுவும் இனி குறையும்

இதெல்லாம் தான் அவ‌ர்க‌ள் எதிர்ப்பதன் முக்கிய காரணம் இதைக் குறி வைத்துதான் அந்நிய சக்திகள் களம் இறங்குகின்றன. தேவையற்ற அரசியல் செய்து வருகின்றன. அவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த வியாபாரமும் இங்கு இனி கொழிக்காது

ஜெர்சி இன ப‌சுவின் விந்துக்களுக்குக்கூட அவர்கள் பல ஆண்டுகளாக காபிரைட் வாங்கி வைத்திருக்கின்றார்கள்.

நம் விருப்பம் போல் அந்த ஜெர்சி மாடுகளை நாம் இனவிருத்தி செய்துவிட முடியாது. காசு கொடுத்துதான் அதன் விந்துவைக்கூட வாங்க முடியும். அதுவும் பல கோடி ரூபாய் வியாபாரம். சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும் இந்த தேசம் அதை உணர்ந்து, திருந்தவில்லை

மோடியரசு இந்த விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை கடுமை செய்யாவிட்டால் எந்த நாட்டு மாடுகளும் இனி நம் நாட்டில் இருக்காது. இதையெல்லாம் வைத்ததுதான் இங்குள்ள பழைய செயலற்ற சட்டம்  கடுமையாக்கப் பட்டுள்ளது

விவ‌சாய‌த்தோடு சேர்ந்து ஒரு தேச‌த்தின் பெரும் ம‌க்க‌ள் தொகையே அழிந்துவிடும். த‌‌ய‌வுசெய்து சிந்தித்து செய‌ல்ப‌டுங்க‌ள்.

இது எந்த சிறுபான்மை ம‌ற்றும் த‌லித்துக‌ள் மீதான‌ போரு‌மல்ல‌ உணவு கட்டுப்பாடும் இல்லை. இது எந்த ம‌த உணர்வு சார்ந்த‌ விஷ‌ய‌மும‌ல்ல‌…. .இயற்கை எரிவாயு விலை குறைவாக கிடைக்கும்.ஜல்லிக்கட்டு நடத்த நல்ல காளைகள் விலை குறைந்து கிடைக்கும். இந்த சட்டம் ஒட்டுமொத்த‌ இந்திய இயற்கை விவ‌சாய‌த்தின் எதிர்கால‌ம்

சட்டத்தை மீறிய வகையில் செயல்பட்ட மாட்டு வதை கூடங்கள் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் அனுமதி பெற்று நடத்தி வருகின்ற கூடங்கள் ஒரு நாளுக்கு எத்தனை மாடுகளை வெட்டி கறி விற்பனை செய்து வருகிறது பற்றி கணக்கு இல்லை. உங்களிடம் மாடுகள் விற்று ரசீது இருப்பது போல மாடுகளை வாங்கி வியாபாரம் செய்பவர்கள் வைத்து இருக்கிறார்கள் இதில் என்ன பிரச்சனை. யார் இதில் அரசியல் செய்வது மாட்டுகறி தோல் வியாபாரிகள் அரசியல் செய்கிறார்கள்

சுதந்திரத்திற்கு முன் ஏற்கனவே நமது நாட்டில் இயற்கை விவசாயத்தில் தான் நமது நிலங்கள் இருந்தது. ஆனால் செயற்கை ரசாயன உர விற்பனை மிகவும் பெரிய அளவில் பணம் புரளும் சந்தை நமது நாட்டு மாடுகள் மந்தை மந்தையாக இருந்தால் இந்த ரசாயன உரம் ஒழியும்.

எங்கும் மாட்டு இறைச்சி கூடங்களில் அரசு விதிமுறைகளை பின்பற்றவில்லை . 3000 மட்டுமே அனுமதி பெற்ற மாடு வெட்டும் கூடங்கள் உள்ளன ஆனால் சட்ட விரோதமாக 3,00,000 மாடு வெட்டும் கூடங்கள் உள்ளன.

அடிமாட்டு விலைக்கு வாங்கி செல்வர் என்றாலே இறைச்சி விலையை விட குறைவாக 1000 ரரூபா‌ய் க்கு அடி மாட்டு காரர்கள் வாங்குவார்கள். இல்லாவிட்டால் பிறகு எப்படி கசாப்புக்கடைகாரருக்கு லாபம் பணம் கிடைக்கும் .நமக்கு தேவையில்லாத புல்,புண்ணாக்கு. தவிடு கழநீர் இலை தழைகளை சாப்பிட்டு நல்ல A1 பாலைக் கொடுக்கும் நாட்டு மாடுகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த சட்டம்.

விவ‌சாய‌த்தோடு சேர்ந்து ஒரு குடும்ப உறுப்பினரான நமது மாடுகளை நமது தோட்டத்தில் புதைத்து நமது மரங்களை உரமிட்டு காப்பாற்ற வேண்டும். வெட்டி உண்ண கூடாது. மாடுகள் வியாபாரிகள் மற்றும் கசாப்புக்கடை காரர்கள் மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தும் .விவசாயம் மற்றும் விவசாயிகளை எந்த விதத்திலும் பாதிக்காது

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...