கோத்ராஜ் மீனா என்பவர், மத்திய பாதுகாப்புப்படை வீரராக இருந்துவருகிறார். 2014 ஆம் ஆண்டு, காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலத்தகாயமடைந்தார். அந்தச் சண்டையின்போது, அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். கழுத்தில் ஒருகுண்டு பாய்ந்தது. அதனால், அவருக்கு சரியாகப் பேசமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சரியாக நடக்கமுடியாமலும் போனது.
85 சதவிகித அளவு பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துவருகிறார். நேற்று, மீனா உள்பட நான்கு பாதுகாப்புப்படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வீரப் பதங்கங்களை வழங்கினார். அப்போது, விருது வாங்குவதற்கு நொண்டியபடியே மீனா மேடைக்கு ஏறிவந்தார். மீனாவின் மார்புப்பகுதியில் விருதைக் குத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், 'ப்ரோட்டாக்காலை' மீறி பாதுகாப்புப்படை வீரரைக் கட்டியணைத்தார். அதன்பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், 'பாதுகாப்புப்படை வீரர் கோத்ராஜ் மீனாவின் வீரத்தை நினைத்தும், மன உறுதியை நினைத்தும் பெருமைப்படுவதாகத் தெரிவித்தார்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.