கப்பல் போக்கு வரத்தை மேம்படுத்த வசதியாக, நீர்வழிப் போக்குவரத்துக் கழகத்தை தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அதானிகுழுமம் சார்பில் ரூ.1,270 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சரக்குப்பெட்டக முனையம், செட்டிநாடு குழுமம் சார்பில் ரூ.151 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ள பலசரக்கு முனையம் மற்றும் சில புதியதிட்டங்களை துறைமுக வளாகத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு துறையின் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி பேசியது:புதிய முனையங்கள் திறக்கப் பட்டுள்ளதன் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் கையாளும்திறன் ஆண்டுக்கு 50 மில்லியனை விரைவில் எட்டும். வாஜ்பாயின் கனவுத் திட்டமான இந்தியாவின் அனைத்து கிராமங்களையும் தேசிய நெடுஞ் சாலையுடன் இணைக்கும் பணியில் அமைச்சகம் முனைப்பு காட்டிவருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் 16,800 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டள்ளன. நீர்வழி பாதைகளை இணைப்பதன் மூலம் போக்குவரத்து செலவை கணிசமாகக் குறைக்கமுடியும். இதற்காகவே ரூ.16 லட்சம் கோடி மதிப்பீட்டிலான சாகர் மாலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சிறு துறை முகங்களை மேம்படுத்தும் பணிகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். இவற்றை பெரிய துறை முகங்களுடன் இணைத்து பயணிகள் கப்பல் போக்குவரத்தைச் செயல்படுத்திட வசதியாக நீர்வழிப் போக்கு வரத்துக் கழகத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இதற்கான நிதி, கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.200 கோடி மத்திய அரசு அளிக்கத் தயாராகஉள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையும், பிறகு திருவனந்தபுரம், கொச்சிவழியாக மும்பைவரை கூட பயணிகள், சுற்றுலா கப்பல்களை இயக்கிட இயலும்.
எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதி ஏற்பட்டவிபத்தால் சுற்றுச்சூழலுக்கும், மீனவர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீட்டு தொகையை இன்னும் 10 நாள்களில் காப்பீட்டுநிறுவனங்கள் வழங்கும். மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதன் மூலம் அதிகலாபம் ஈட்டமுடியும். இதற்கென ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்க அரசு தயாராக உள்ளது.
சாகர்மாலா திட்டத்தின்கீழ் கிழக்கிலும் மேற்கிலும் கப்பல்கள் தடையின்றி சென்றுவர சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் அவசியமானது. ஆனால் ராமர் பாலத்திற்குச் சேதம் இல்லாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்தவே மத்திய அரசு விரும்புகிறது.உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்தவழக்கின் தீர்ப்புக்கு பிறகே இத்திட்டம் குறித்து மத்திய அரசு இறுதிமுடிவு எடுக்கும் என்றார் கட்கரி.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.