பசு பக்தி என்றபெயரில் படுகொலைகள் நடப்பது ஏற்கத்தக்கதல்ல என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, "எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வல்ல.
இன்று நடைபெறும் சிலவிரும்பத்தகாத சம்பவம் தொடர்பாக எனது வேதனையை தெரிவிப்பதோடு அது தொடர்பாக சிலவார்த்தைகளையும் கூறவிரும்புகிறேன்.
பசு பக்தி என்ற பெயரில் யாரையும் படுகொலைசெய்வது ஏற்கத்தக்கதல்ல. மகாத்மா காந்தியும், வினோபா பவேவும் பசுபாதுகாப்பு குறித்து பேசியளவுக்கு வேறுயாரும் பேசியிருக்க மாட்டார்கள்.
ஆனால், இன்று பசுபக்தி என்ற பெயரில் படுகொலைகள் நடப்பதை மகாத்மா காந்தியே ஏற்க மாட்டார்.இத்தேசத்தில் யாருக்கும் சட்டத்தை தங்கள்கைகளில் எடுத்துக்கொள்ளும் அதிகாரம் இல்லை. வன்முறை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாக இருந்த தில்லை இனியும் இருக்கப்போவதில்லை.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். மகாத்மாகாந்தி கண்ட கனவு இந்தியாவை நனவாக்குவோம். நமது தேச விடுதலைக்காக போராடியவர்கள் பெருமை கொள்ளும் வகையில் நமது தேசத்தை வளர்த்தெடுப்போம். நமதுதேசம் அகிம்சைக்கு பெயர் பெற்றது.
2017-ம் ஆண்டு, சம்பாரண் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு என்பதோடு சபர்மதி ஆசிரமம் நிறுவப்பெற்றதன் நூற்றாண்டும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.