அயோத்தியில் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கிறார்கள், இங்கே இருப்பவர்களுக்கு என்ன?

அயோத்தியில், ராமர் கோவிலை கட்டிக் கொள்ளலாம்' என ஷியா வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததைது பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியதாவது.

''இந்த வழக்கு 1948-ல் இருந்தே தொடங்கி விட்டது. சம்பந்தப் பட்ட இடத்தில் ராமர்சிலை வைத்து வழிபாடு தொடங்கிய அந்தக் காலகட்ட த்திலேயே அதற்கு எதிர்ப்புதெரிவித்து வழக்கு தொடுத்தவர்கள் ஷியா வக்ப் போர்டுதான். 

2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூட, 'இந்த இடத்தில் கோவில் இருந்தது. அதை நீக்கித் தான் மசூதி கட்டப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்கள். சம்பந்தப்பட்ட இடத்தில்,  ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பு மற்றும் அங்கே இருந்த கோவில் டிரஸ்டி என 2 பாகம் இந்துக்களுக்கு. 3-வது பாகம் ஷியா வக்ப் போர்டுக்கு. ஒரிஜினலாக வழக்குதொடுத்ததே ஷியா வக்ப் போர்டுதான். எனவே, சன்னி இஸ்லாமியருக்கு இதில் சம்பந்தமே கிடையாது. 'நியாயமான தூரத்தில் மசூதியைக் கட்டிக் கொள்கிறோம்' என்று ஷியா தரப்பினரே சொல்லிவிட்டனர். 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சிசெய்து, ஏற்கெனவே அங்கே கோவில் இருந்ததை உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும்கூட 2 இந்து நீதிபதிகளும் சேர்ந்து கொடுத்திருக்கும் தீர்ப்பில், 'கோவிலை இடித்து அதன் மீது  கட்டப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்கள். மற்றொரு இஸ்லாமிய நீதிபதியோ, 'கோவில் இடித்த இடிபாடின் மீது கட்டப்பட்டுள்ளது'  என்று குறிப் பிட்டுள்ளார். அதாவது 'இடித்துக்கட்டியது' என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறார். எனவே, அங்கே ஏற்கெனவே கோவில்தான் இருந்தது என்பதை 3 நீதிபதிகளுமே ஒப்புக்கொள்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரையில், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி முழுவதுமே இந்துக்களுக்குச் சொந்தம். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பில் 3-வது பாகம் ஷியாவக்ப் போர்டுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களும் கூட, 'நாங்களே இந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு நகர்ந்து விடுகிறோம்' என்று சொல்லி விட்டதால், ஒட்டுமொத்தமாக வழக்கே முடிவுக்கு வந்துவிடுகிறது. 


2004-லேயே இந்த முடிவைக் கிட்டத்தட்ட நாங்கள் நெருங்கினோம். அதாவது ஒரிஜினல் வழக்குதா ரர்களான ஷியா பிரிவினர் அப்போதே விட்டுக்கொடுக்கத் தயாராகவே இருந்தார்கள்.  ஆனால், அப்போது வாஜ்பேயி அரசு தேர்தலில் தோற்றுப் போனதால், தீர்வு கிடைக்காமல் போனது. சுருக்கமாகச் சொன்னால், அயோத்தியில் உள்ள முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், மதவெறியைத் தூண்ட நினைப்பவர்கள் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்'' என்று வெடித்து முடித்தார் ஹெச்.ராஜா!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...