வெளிநாடுகளில் இருந்து 24 சிலைகள் மீட்பு

இந்தியாவில் இருந்து வெவ்வேறுவழிகளில் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட 24 பழங்காலச் சிலைகளை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் மீட்டுள்ளது.
அமெரிக்காவில்இருந்து நடராஜர், பாகுபலி உள்பட 16 சிலைகளும், ஆஸ்திரேலியாவில் இருந்து 5 சிலைகளும், கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகியநாடுகளில் இருந்து தலா ஒருசிலையும் மீட்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் யாவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்திய தொல்பொருள் ஆய்வகம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 2017 வரையிலான காலக் கட்டத்தில், இந்த சிலைகளைச் சம்பந்தப்பட்ட வெளிநாடுகள் தாங்களாக முன் வந்து கொடுத்தன என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்விட்ர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இன்னும் 13 சிலைகள் மீட்கப்பட இருப்பதாகவும் தொல்லியல் ஆய்வகம்தெரிவித்துள்ளது. இந்தியாவில் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை, தூதரக வாயிலாக, ராஜீய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு மீட்டுவருகிறது என்று
மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.


தமிழகத்தைச் சேர்ந்த சோழர்கால ஸ்ரீதேவி உலோகச் சிலை, மாணிக்கவாசகரின் வெண்கலச் சிலை, விநாயகர், பார்வதி, பாகுபலி உருவம் பொறித்த உலோகத் தகடுகள் மற்றும் மெüரியர் கால சுடுமண் சிற்பம் உள்ளிட்டவை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டவையாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...