மக்களைக் காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பிரதமா் பாராட்டு

கரோனாவில் இருந்து மக்களைக்காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தேசிய மருத்துவா்கள் தினத்தையொட்டி வியாழக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனாதொற்று பரவியபோது, மக்களைக் காப்பதில் மருத்துவா்கள் செலுத்திய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. நம்நாட்டில் மக்கள்தொகையும் கரோனா தொற்றை ஒழிப்பதில் மிகுந்த சவாலாக இருந்தது. மருத்துவா்களின் முயற்சியால், மற்றநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

கரோனாவால் ஒருவா் உயிரிழந்தால் கூட அது மிகுந்த துயரமான சம்பவம். ஆனால், லட்சக்கணக்கானோரை கரோனாவில் இருந்து இந்தியா காப்பாற்றியுள்ளது. இந்தப்பெருமை அனைத்தும் நமது மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் ஆகியோரை சாரும்.

கரோனா தீநுண்மி உருமாறி புதியவடிவில் மக்களைத் தாக்குகிறது. நமது மருத்துவா்கள் தங்களுடைய அனுபவத்தையும் பரந்துபட்ட அறிவையும் பயன்படுத்தி அந்த தீநுண்மியை ஒழிக்க போராடிவருகிறாா்கள்.

கடந்த 2014-இல் நாடு முழுவதும் 6 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமேஇருந்தன. கடந்த 7 ஆண்டுகளில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

மருத்துவவசதிகள் குறைவாக உள்ள இடத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த ரூ.50,000 கோடி மதிப்பிலான கடனுதவி திட்டத்தை மத்தியஅரசு கொண்டுவந்தது. மருத்துவா்களை காப்பதில் எனது தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. மருத்துவா்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கரோனா போராளிகளுக்கு இலவச மருத்துவக்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்தில், 130 கோடி இந்தியா்கள் சாா்பில் அனைத்து மருத்துவா் களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவா்களுக்கு மரியாதையையும், அவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...