மக்களைக் காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பிரதமா் பாராட்டு

கரோனாவில் இருந்து மக்களைக்காப்பாற்றிய மருத்துவா்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தேசிய மருத்துவா்கள் தினத்தையொட்டி வியாழக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனாதொற்று பரவியபோது, மக்களைக் காப்பதில் மருத்துவா்கள் செலுத்திய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. நம்நாட்டில் மக்கள்தொகையும் கரோனா தொற்றை ஒழிப்பதில் மிகுந்த சவாலாக இருந்தது. மருத்துவா்களின் முயற்சியால், மற்றநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

கரோனாவால் ஒருவா் உயிரிழந்தால் கூட அது மிகுந்த துயரமான சம்பவம். ஆனால், லட்சக்கணக்கானோரை கரோனாவில் இருந்து இந்தியா காப்பாற்றியுள்ளது. இந்தப்பெருமை அனைத்தும் நமது மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் ஆகியோரை சாரும்.

கரோனா தீநுண்மி உருமாறி புதியவடிவில் மக்களைத் தாக்குகிறது. நமது மருத்துவா்கள் தங்களுடைய அனுபவத்தையும் பரந்துபட்ட அறிவையும் பயன்படுத்தி அந்த தீநுண்மியை ஒழிக்க போராடிவருகிறாா்கள்.

கடந்த 2014-இல் நாடு முழுவதும் 6 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமேஇருந்தன. கடந்த 7 ஆண்டுகளில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

மருத்துவவசதிகள் குறைவாக உள்ள இடத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த ரூ.50,000 கோடி மதிப்பிலான கடனுதவி திட்டத்தை மத்தியஅரசு கொண்டுவந்தது. மருத்துவா்களை காப்பதில் எனது தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. மருத்துவா்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கரோனா போராளிகளுக்கு இலவச மருத்துவக்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்தில், 130 கோடி இந்தியா்கள் சாா்பில் அனைத்து மருத்துவா் களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவா்களுக்கு மரியாதையையும், அவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...