மோடி அரசாங்கம் பழியை சுமந்தாலும், செய்தது சரியே

நீட் தேர்வு விலக்கில் தமிழகத்தை நம்ப வைத்து ஏமாற்றியதாக பாரதிய ஜனதாவை ,குறிப்பாக நிர்மலா சீத்தா ராமனை குறிவைத்து தமிழகத்தில் அமளிதுமளி நடக்கிறது. திமுக கடும் எதிர்ப்பைதெரிவித்து வருகிறது.

இதில் அனிதா என்ற மாணவி உயிரையே விட்டுவிட்டாள். இதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?. இந்தியாவில் எந்த மாநிலமும் விலக்கு கேட்காத சூழலில், நீட் தேர்வு மருத்துவ படிப்பு நல்லது என்று டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் கூறும் நிலையில் இதை இன்னும் அலசுவோம்.

தமிழகத்தில் 2 துறைகள் எனக்குத் தெரிந்து திராவிடக் கட்சிகளால் நாசப்படுத்தப்பட்டு விட்டன. பகீரென்றிருக்கிறது..அதுவும் கனடா வந்தவுடன் எனக்கு இன்னும் அதன் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.

1. பொறியியல் துறை. இங்கே படித்தவர்களில் பெரும்பாலானோர் சாதாரண குமாஸ்தா வேலையோ அல்லது தட்டச்சு வேலையோ நான் சென்னையில் இருந்த கால கட்டங்களில் வேலை பார்த்திருக்கிறார்கள்..என்னுடைய உதவியாளே இந்த ரகம். அவர் சொன்னது இது. நானும் பார்த்திருக்கிறேன்.

புற்றீசல் போல் முளைத்து நிற்கும் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் ஏராளம். அதனால் தரம்குறைந்து கொண்டுவருகிறது.

2. சட்டக்கல்லூரிகள். அடியாள் கூட்டமாக மாறிவருகிறது. என்னுடைய நண்பர்.Manohar Nadar.. ஒத்துக் கொள்வார். அவர் அங்கே தான் படித்தார்.

இரண்டு துறைகளிலும் திராவிட அரசியல் புகுந்துவிட்டது. பாழ்படுத்தி விட்டது.

அடுத்து உயிரோடு விளையாடும் மருத்துவம். தரமுள்ள மாணவர்கள் நாளை மருத்துவர்களாகி அவர்களிடம்தான் நானோ நீங்களோ உடலைக் காட்டவேண்டும்.

மாநில பள்ளித் தேர்வில் 1179 வாங்கிய அனிதா, நீட் தேர்வில் 80 வாங்கியிருக்கிறாள் என்றால் மாநில கல்வித் தரம் அப்படி.அவளால் 1179 எப்படி வாங்கமுடிந்தது? எப்படி 80 தான் வாங்க முடிந்தது?

இதயதெய்வம் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் "நான்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன்" என்று சொல்லியே வாக்கு வாங்கி யிருக்கிறார். அப்படியானால் ஏன் கிராமப்புறத்தின் கல்வித்தரத்தை உயர்த்த வில்லை?

எந்த ம..ருக்கு தமிழகம் நிரந்தர விலக்கு கேட்கிறது? இன்னும் எத்தனை யுகத்துக்கு கிராமத்தானை கிராமத்தானாகவே வைத்திருக்க நினைக்கிறது? அவனது வாழ்க்கைத்தரம் உயர்த்த ஏன் இவர்கள் கடந்த 50 ஆண்டு காலத்தில் தவறி விட்டார்கள்?

இவர்களை இப்படியே விட்டால், பூனைக்கு யார் தான் மணி கட்டுவது? ஆக, இந்த இடத்தில் தான் தமிழகத்தின் கல்வித்தரத்தின் சாயம் வெளுக்கப்பட்டு விட்டது.. மோடி அரசாங்கம் பழியை சுமந்தாலும், அவர்கள் செய்தது சரி தான். கிராமங்கள் தமிழகத்தில் மட்டும் தான் இருக்கிறதா? விவாதிப்போம்..

கருடால்வான்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...