முந்தைய காலங்களை ஒப்பிடும் போது, ஜம்மு-காஷ்மீரில் தற்போது அமைதியான சூழலே நிலவிவருகிறது

ஜம்முகாஷ்மீரில் நிலவிவரும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, பிரிவினைவாதிகள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இருப்பதாக பாஜக பொதுச்செயலர் ராம்மாதவ் தெரிவித்தார்.


இது குறித்து ஸ்ரீ நகரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக் கிழமை கூறியதாவது: முந்தைய காலங்களை ஒப்பிடும் போது, ஜம்மு-காஷ்மீரில் தற்போது அமைதியான சூழலே நிலவிவருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன.


பயங்கரவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்டவற்றால் காஷ்மீர்மக்கள் அதிக அளவிலான துன்பங்களை சந்தித்துவிட்டனர். இனி அவர்களை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே மத்திய அரசின் ஒரே குறிக்கோளாகும்.


நமது அண்டை நாடான பாகிஸ்தான், ஜம்முகாஷ்மீரில் தொடர்ந்து பிரச்னைகளை உருவாக்க முயன்று வருகிறது. எனினும், அவர்களின் முயற்சிகளை நமது ராணுவவீரர்கள் முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு படையினருடன் சிலர் மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இது, மாநிலத்தின் நலனுக்கு உகந்தது அல்ல. காஷ்மீரில் நிலவிவரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண பேச்சு வார்த்தை ஒன்றே சிறந்த வழியாகும்.


அந்த வகையில், காஷ்மீரில் அனைத்துத் தரப்பினருடனும் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்கின்றன. அவர்கள் பிரிவினை வாதிகளாக இருந்தாலும், அவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தவிவகாரத்தில், அரசியலுக்கு அப்பாற்றப்பட்டு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைத்தால், ஜம்மு-காஷ்மீரில் வெகு விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றார் ராம் மாதவ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.