மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவு குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது : தற்போது மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உள்ளது. இதனை 65 வயதாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. மத்திய சுகாதாரப் பணியில் உள்ள மருத்துவர்கள் தவிர எஞ்சிய மருத்துவர்களுக்கு இதுபொருந்தும்.

கடந்த ஜூலை மாதத்தில் மத்திய ஆயுதப்படையில் மருத்துவப் பணியில் உள்ளவர்களின் ஓய்வுபெறும் வயது 60ல் இருந்து 65ஆக உயர்த்தப்பட்டது. மருத்துவர்களின் அனுபவம் மற்றும் மருத்துவர்கள் பற்றாக் குறை உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு மத்திய அமைச்சரவை இந்த முடிவு எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. EXPAND தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆர்மி கன்டோண்ட்மென்ட் பகுதிகளில் டவர்களை நிறுவ அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...