பெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவில் தொடங்கப் படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியப் பொருள்களின் விலையை தினசரிநிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால், பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்ததாகக் கூறி அரசுக்குஎதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தவிவகாரம் குறித்து விளக்கமளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''அமெரிக்காவைத் தாக்கிய ஹார்வி மற்றும் இர்மா புயல்களால் பெட்ரோலியப்பொருள்கள் உற்பத்தி குறைந்ததன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை நிச்சயமற்றதாய் இருக்கிறது. இதனால், பெட்ரோலிய பொருள்கள் விலை கூடியது. தற்போது அதன்விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி விலை குறையும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கிவைத்துப்பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ’தொலைதொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி அனைத்து துறைகளிலும் வணிகம் செய்யும்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு, நுகர்வோருக்கு நன்மைகிடைக்கிறது. அதேபோல் தொலைத் தொடர்புப் புரட்சியால் சரியான கொள்கைகளின் உதவியோடு இயங்கும் சுதந்திரமான சந்தைகள் நுகர்வோருக்கு எப்போதும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது. தகவல்தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் வீடுகளில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றைக் கொண்டுசேர்க்கும் திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம்'' என்று பேசினார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.