ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது

காஷ்மீரில், மத்திய அமைச்சர், ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி – பா.ஜ., கூட்டணிஆட்சி நடக்கிறது. எம்.பி.,க்கள், தங்கள் சொந்ததொகுதியில், ஒருகிராமத்தை தத்தெடுத்து, முன்மாதிரி கிராமமாக மாற்றும், 'சன்சத் ஆதர்ஷ்கிராம்' திட்டத்தை, 2014ல், பிரதமர் மோடி துவங்கினார்.

இதன்படி, ஜம்மு – காஷ்மீரில்தான், எம்.பி.,யாக தேர்வுசெய்யப்பட்ட, உதாம்பூர் தொகுதிக்கு உட்பட்ட, அம்பாலா கிராமத்தை, மத்திய இணை அமைச்சர், ஜிதேந்திரசிங் தத்தெடுத்தார்.அங்கு, மத்திய, மாநில அரசு துறைகளின் சார்பில், பல்வேறுதிட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து, ஜிதேந்திர சிங் கூறியதாவது: அம்பாலா கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத பகுதியாக அறிவிக்கப் படுகிறது. அம்பாலா கிராமத்தில் வங்கி, ஏ.டி.எம்., மையம், பொதுசுகாதார மையம், மேல்நிலைப் பள்ளி, விளையாட்டு மைதானம், ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும். இதேபோல், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத மாநிலம் என்ற சாதனையை, ஜம்முகாஷ்மீர் விரைவில் படைக்கும்.

தேவிகாநதியை துாய்மைப்படுத்துவது; 3,500 கோடி ரூபாயில், சட்டர்லேகா சுரங்கப்பாதை; உதம்பூரில் உயிர் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை, பிரதமர் மோடி வழங்கிஉள்ளார். மாநிலமக்கள், மத்திய அரசுக்கு, மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...