பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்

பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள்  குறைக்க வேண்டும் என, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளனர். தினசரி விலை நிர்ணயமுறை அமலுக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்துவந்தன. சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தீபாவளி சமயத்தில் பெட்ரோல்விலை குறையும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.  இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை லிட்டருக்கு ரூ.2 வீதம் குறைத்து மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இது நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.  இதன்படி நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.63 குறைந்து ரூ.70.85 ஆகவும், டீசல் ரூ.2.41 குறைந்து ரூ.59.89 ஆகவும் இருந்தது.

இந்நிலையில், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:   பெட்ரோலிய பொருட்களுக்கு மாநில அரசுகள் வாட்வரியை வசூலிக்கின்றன. இவற்றை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததுபோல மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க நுகர்வோர் நலன் கருதி பொறுப்பேற்க வேண்டும். இவற்றின்மீது விதிக்கப்படும் வாட் வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம் என்றார்.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி 3 நாள் பயணமாக  வங்கதேச தலைநகர் தாகாசென்றுள்ளார். அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்தபாதிப்பிலிருந்து வாடிக்கையாளர்கள் விடுபடும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட்வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும். வாட் வரி தவிர, பெட்ரோலிய பொருட்களில் இருந்து கிடைக்கும்வரி வருவாயில் பெரும் பகுதி மாநிலங்களுக்கு செல்கிறது. மத்திய அரசு வரிகளில் 42 சதவீதம் அவர்களுக்கு கிடைக்கிறது. எனவே இந்த சுமையை மாநிலங்களும் ஏற்கவேண்டும். எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், நுகர்வோரின் சிரமத்தை குறைக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...