உலக பொருளா தாரத்தில் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது இடத்தைபிடிக்கும்

உலக பொருளா தாரத்தில் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது இடத்தைபிடிக்கும் என்று உள்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தொிவித்துள்ளாா்.

அரக்கோணத்தை அடுத்த நகாிகுப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தெற்குமண்டல பயிற்சி மையத்தில் 31-வது பிரிவு துணை கமாண்டண்டுகள், 43-வது பிரிவு உதவி ஆய்வாளர்கள், 8-வது பிரிவு துணை உதவிஆய்வாளர்கள் உள்ளிட்டோரின் பயிற்சி நிறைவுவிழா இன்று நடைபெற்றது.

அலுவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். சிறப்பாக பயிற்சிமுடித்த 120 பெண்கள் உள்பட 1043 வீரர்களுக்கு சான்றிதழ்வழங்கி உறையாற்றினார்.

அப்போது அவா் கூறுகையில், உலக நாடுகளுக் கெல்லாம் தீவிரவாதம் பெரும்சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தியா பொருளா தாரத்தில் வளர்ச்சி அடைந்துவருகிறது. அந்நியசக்திகள் பொருளாதார வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கின்றன.

பிரதமர் நரேந்திரமோடி, தீவிரவாத செயல்களுக்கு எதிராக, உலகரங்கில் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறார். சைபர் தீவிரவாத அச்சுறுத்தல், உலகநாடுகளுக்கு மற்றுமொரு சவாலாக உருவாகி வருகிறது.

சைபர் அச்சுறுத்தலை முழுமையாக தடுக்கவேண்டும். 2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளா தாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும். பயங்கரவாதம், தீவிரவாதத்தை ஒழிக்க வீரர்களுக்கு பயம் இருக்கக்கூடாது. சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு பணிபுரியவேண்டும்.

அணுஉலை, விமான நிலையம் உள்பட தொழிற் சாலைகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ளன. இதனை மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் முறியடிக்க வேண்டும். மத்திய தொழில்பாதுகாப்பு படையை, தொழில் நுட்ப ரீதியாக வலுசேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று தொிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...