தமிழகத்தில் பாரதிய ஜனதா வளர்ந்துகொண்டே வருவதால் திமுக பதற்றமடைகிறது

தமிழகத்தில் பாரதிய ஜனதா வளர்ந்துகொண்டே வருவதால் திமுக பதற்றமடைகிறது என்றார் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்.


திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் பாளையங் கோட்டை ஜவாஹர் திடலில் செவ்வாய்க்கிழமை (அக். 10) பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் பாஜகவில் இணைவதோடு, பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜகவை வளர்க்க விஸ்தார் திட்டத்தின்கீழ் துரிதப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசின் 300-க்கும் மேற்பட்ட சிறந்ததிட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் பாஜக செல்வாக்கை அதிகரிக்க தொண்டர்கள் உழைக்கவேண்டும்.


தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என திமுகவினர் கூறிவருகிறார்கள். ஆனால், பாஜக வளர்வதால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதற்றமடை கிறார்கள் என்பதே உண்மை. கங்கை, காவிரியைத் தொடர்ந்து தாமிரவருணியில் புஷ்கரணி நிகழ்ச்சி அடுத்தாண்டில் வரஉள்ளது. இதையொட்டி நதியை தூய்மைப்படுத்தவும், இங்கு வரும்பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...