நகரங்களில் உள்ள எல்லா வசதிவாய்ப்புகளும் கிராமத்தில் உள்ள சிறுவனுக்கும் கிடைக்க வேண்டும்

நாட்டில் கிராமங்களின் வளர்ச்சிக்கு, தொழில் நுட்ப வசதிகள் எல்லாம் வர வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார்.

சீர்திருத்தவாதி நானாஜி தேஷ்முக்கின் நூற்றாண்டு மற்றும் சமூகசோஷியலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணின் 115-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

நாட்டில் வரிசையில் கடைசி யில் நிற்கும் குடிமகனுக்கும் எல்லாபலன்களும் சென்று சேரவேண்டும். அதற்கான எல்லா ஆதாரங்களும் நம் நாட்டில் உள்ளன. கிராமங்களில் வளங்குன்றா வளர்ச்சியை கொண்டு வரவேண்டும். அதற்கு தற்போதுள்ள தொழில் நுட்பங்களைக் கொண்டு தேவையான மக்களுக்கு எல்லா திட்டங்களையும் கொண்டுசேர்க்க வேண்டும். இது சிறந்த நிர்வாகத்தின் மூலம் சாத்தியமாகும்.

எந்த ஒருதிட்டமும், அது ஆரம்பிக்கப் பட்டதற்கான நோக்கத்தில் இருந்து சற்றும்விலகாமல் அமல்படுத்த வேண்டும். அப்படிசெய்தால் எந்த திட்டமும் வெற்றிபெற்றுவிடும். அரசு திட்டங்களை அமல்படுத்தும் போது முடிவுசார்ந்த அணுகுமுறை வேண்டும். அதேபோல் திட்டங்களை முடிக்க காலநிர்ணயம் முக்கியம்.

அகல் விளக்கு அல்லது மண் விளக்கு போன்ற கிராமங்களில் உற்பத்திசெய்யப்படும் பொருட்களை நகரங்களில் உள்ளவர்கள் பயன்படுத்தினால் கூட, அது கிராம மக்களின் நல்வாழ்வுக்கு உதவியாக இருக்கும். கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சாரவசதி, தண்ணீர் விநியோகம், இணையதளத்துக்கான ஆப்டிகல் கேபிள் இணைப்பு ஆகியவை இருந்து விட்டால் போதும். டாக்டர்களும், ஆசிரியர்களும், அதிகாரிகளும் கிராமங்களில் பணியாற்ற தயங்க மாட்டார்கள். அவர்கள் நீண்ட நாட்கள் கிராமங்களில் தங்கும்போது, தானாகவே அவர்களால் கிராம மக்களுக்கு பலன் கிடைக்கும். நகரங்களில் உள்ள வசதிகள் இப்போது கிராமங்களுக்கு வந்து கொண்டி ருக்கின்றன.

நகரங்களில் உள்ள எல்லா வசதிவாய்ப்புகளும் கிராமத்தில் உள்ள சிறுவனுக்கும் கிடைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...