ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப் பட்டது நாட்டில் சரித்திர திருப்பு முனை

ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப் பட்டது நாட்டில் சரித்திர திருப்பு முனையை ஏற்படுத்தி யுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன்  தெரிவித்தார்.


உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஓராண்டு நிறைவுதினம், கருப்புப் பண ஒழிப்பு வெற்றி நாளாக பாஜக சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றகையெழுத்து இயக்கத்தை மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பணமதிப் பிழப்பு நடவடிக்கையால் ரிசர்வ்வங்கிக்கு ரூ.15.26 லட்சம் கோடி திரும்பிவந்தது. வங்கிகளில் 17.73 லட்சம் போலி கணக்குகள் கண்டறியப்பட்டன. 23.22 லட்சம் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ. 3.68 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. நாடுமுழுவதும் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனைகள் மூலம் ரூ.29 ஆயிரம்கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம்வரை ரூ.12 லட்சம் கோடி பதுக்கல்பணம் கண்டறிப் பட்டுள்ளது.


மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், 2.24 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப் பட்டன. 100 -க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் வைத்திருந்த போலி நிறுவனங்கள் பிடிபட்டன. இதில் ஒரு நிறுவனம் மட்டும் 2,134 வங்கிக் கணக்குகள் வைத்திருந்தது கண்டறியப் பட்டது.


வருமானவரி செலுத்துவோர் எண்ணிக்கை 66.53 லட்சத்தில் இருந்து 85 லட்சமாக உயர்ந் துள்ளது. நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாற்றத்தை யாருமே பாதிக்கப் படாமல் கொண்டுவர முடியாது. இதனால் சிலர் பாதிக்கப் படலாம். ஆனால் அதற்கான விளைவுகள் நாட்டை பெரும் முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லும். எதிர்க்கட்சிகள் இதை வீணாக அரசியலாக்கு கின்றனர் என்றார் அவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...