ஒக்கி புயலால் தமிழகம், கேரளம், லட்சத் தீவுகளில் 1,540 பேர் இது வரை மீட்ப்பு

ஒக்கி புயலால் தமிழகம், கேரளம், லட்சத் தீவுகள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் உள்பட 1,540 பேர் இது வரை மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தேசிய நெருக்கடிகால மேலாண்மை குழுவின் கூட்டம் மத்திய அமைச்சரவை செயலர் பிகே.சின்ஹா தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தக்கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


ஒக்கிபுயலால் தமிழகம், கேரளம், லட்சத் தீவுகள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் உள்பட 1,540 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 243 மீனவர்கள் தமிழ்நாட்டையும், 250 மீனவர்கள் கேரளத்தையும், 1,047 பேர் லட்சத் தீவுகளையும் சேர்ந்தவர்கள்.


தமிழகம், கேரளம் மற்றும் லட்சத் தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வர்களுக்கு நிவாரணப் பொருள்களை அந்தந்த மாநில அரசு நிர்வாகங்கள் அளித்துள்ளன. நிலைமையை கையாள அவை உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு 10 கடலோர காவல்படை கப்பல்கள், 6 விமானங்கள், 4 ஹெலி காப்டர்கள், 10 கடற்படைக் கப்பல்கள் ஆகியவற்றை ஈடுபடுத்தியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...