முத்தலாக் சட்டத்தை ஒருமித்தகருத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

முத்தலாக் சட்டத்தை ஒருமித்தகருத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் மூன்று முறை தலாக்கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது.

இதையடுத்து, முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் புதிய சட்ட முன்வடிவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மக்களவையில் இன்று தாக்கல்செய்தார். இந்த சட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும், முஸ்லிம் அமைப்பகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனை அப்படியே நிறைவேற்ற காங்கிரஸூம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிலதிருத்தங்கள் செய்ய வேண்டும், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டுள்ளது. இதுபற்றி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் கூறியதாவது:

‘‘முத்தலாக் சட்டம் குறித்து பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. சட்டத்துக்கு புறம்பாக முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க இந்தசட்டத்தில் வகை செய்யப் பட்டுள்ளது. இதுபற்றி எதிர்கட்சிகள் மாற்று கருத்து தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் எதிர் கட்சிகளுடன் விவாதித்த ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’’ எனக்கூறினார்.

இதனிடையே, முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற மக்களவையில், ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. அதேசமயம், மாநிலங்கள வையில் எதிர்கட்சிகளின் ஆதரவுடன்தான் நிறைவேற்றும் சூழல் உள்ளது. எனவே இந்தமசோதாவை நிறைவேற்ற, பிஜூ ஜனதாதளம், திரிணமுல் காங்கிரஸ் உட்பட பிறகட்சிகளின் ஆதரவை பெற, பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது.

முத்தலாக் சட்டமுன்வடிவில், "சட்டத்துக்கு புறம்பான முறையில் மூன்று முறை தொடர்ந்து தலாக்கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை அளிக்கப்படும். இதை அவர்கள் வாய்மொழி, கடிதம், இமெயில், கைப்பேசியின் குறுந்தகவல் உட்பட எந்தவகையிலும் அளிக்க முடியாது. இதை மீறி, முத்தலாக் கூறும் முஸ்லிம் ஆண்கள் மீது அளித்து அவர்கள் கைது செய்யப் பட்டால் ஜாமீன் தரப்பட மாட்டாது. இத்துடன், விவாகரத்து பெறும் பெண்களுக்கு முறையான ஜீவனாம்சம் அளிக்கவும், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பிற்கு பொறுப்பேற்கவும் வசதிசெய்யப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...