உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.10,132 கோடி ஒதுக்கீடு

ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள் நாட்டுப் பாதுகாப்பு செலவினங்களுக்காக மத்திய அரசு ரூ.10,132 கோடி ஒதுக்கீடுசெய்துள்ளது.

கடந்த செப்டம்பர் 27-ம்தேதி அறிவிக்கப்பட்ட, போலீஸ் படைகளை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 2017-18 முதல் 2019-20 வரையிலான 3 ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மக்களவையில் நேற்று மேலும் கூறும் போது, “ரூ.25,061 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் மத்திய ஒதுக்கீடுமட்டும் ரூ.18,636 கோடியாகும். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள் பயன்பாடு, போலீஸ்படைகளின் இடம் பெயர்வு, போலீஸ் படைகளுக்கு தேவையான பிற உதவிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை இத்திட்டம் கொண்டுள்ளது.

நக்சல் வன்முறையால் மிகவும்பாதிக்கப்பட்ட 35 மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.3,000 கோடி வழங்கப் படும். வடகிழக்கு மாநிலங்களில் போலீஸ் படைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பயிற்சிமையங்கள் மற்றும் பிற வசதிகளுக்காக ரூ.1,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், ஜம்முகாஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சவால்களை எதிர் கொள்ளும் அரசின் ஆற்றல் மேம்படும்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.