21 மாநிலங்களில் பாஜக ஆட்சி பெருமை ப்படுகிறேன்

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 வட கிழக்கு மாநிலங்களுக்குான பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகால யாவில் இழுபறி நீடித்துவருகிறது.

திரிபுராவில் 41 இடங்களில் முன்னிலையுடன் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இதன் மூலம் அங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியாவில் இனி இடதுசாரிகளுக்கு எந்தஉரிமையும் இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் எங்களுடன் கூட்டணி அமைத்தகட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமிளிக்கப்படும் என்பதை உறுதிபடுத்துகிறேன்.

ஒருவேளை மேகாலயாவில் பாஜக ஆட்சி அமைக்க இயலா விட்டாலும் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுவதை நினைத்து பெருமைப்படுகிறேன். இன்னும் கேரளா, ஒடிஸா மற்றும் மேற்குவங்கம் மட்டும்தான் மீதமுள்ளது.

இந்தமாபெரும் வெற்றி அளித்த உற்சாகத்துடன் கர்நாடக தேர்தலைச்சந்திக்க உள்ளோம். எனவே கர்நாடகத்திலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்தவெற்றி அந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக-வுக்கு தொடர்ந்து கிடைத்துவரும் இந்தவெற்றி 2019-ல் நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமளித்துள்ளது. இது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியின் வளர்ச்சி திட்டங்களுக்கு கிடைத்தவெற்றி. இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகள் போதிய வளர்ச்சியை அடையவில்லை என்று கூறிய பிரதமர் அங்கு நலத் திட்டப் பணிகளை துரிதப்படுத்தினார். இது அந்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...