ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் பொய் குற்றம்சாட்டப்பட்ட சுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ள சார்மினாருக்கு அருகில் மெக்கா மசூதியில், கடந்த 2007, மே 18-ம் தேதி வெள்ளிக் கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இந்த தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பின் போது வெடிக்காத 2 சக்தி வாய்ந்த வெடி குண்டுகளையும் போலீசார் பறிமுதல்செய்தனர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் வழக்கில், அசிமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, உள்ளிட்ட 8 பேர் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுனில் ஜோஷி விசாரணையின் போது படுகொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் இருவர் தப்பிய நிலையில் 5 பேர் மீதான வழக்கு ஹைதராபாத் தேசியபுலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதராங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அனைவரையம் விடுதலைசெய்தது.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.